நதியோடையில் அன்னமென
வஞ்சியவள் நடைபயில !
ஆதாரசுதியென அலையோசை
ஆத்மராகமாய் பாட்டிசைக்க !
சேலோடு சேர்ந்து
செவ்விதழையொத்த செம்பொற்பாதங்கள் !
சிற்பிக்குள்ளிருக்கும் முத்தைப்போல்
ஐயிருவிரல்களும் அழகுசேர்க்க !
முகம்பார்க்க எண்ணி
கண்விழிக்க துயிலெழுந்தேன் !
குறிப்பு : கனவில் கண்ட காட்சி
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
Nice but try any புதுக்கவிதை
ReplyDelete