செம்பொற்பாதங்கள்


நதியோடையில் அன்னமென
வஞ்சியவள் நடைபயில !

ஆதாரசுதியென அலையோசை
ஆத்மராகமாய் பாட்டிசைக்க !

சேலோடு சேர்ந்து
செவ்விதழையொத்த செம்பொற்பாதங்கள் !

சிற்பிக்குள்ளிருக்கும் முத்தைப்போல்
ஐயிருவிரல்களும் அழகுசேர்க்க !

முகம்பார்க்க எண்ணி
கண்விழிக்க துயிலெழுந்தேன் ! 

குறிப்பு : கனவில் கண்ட காட்சி

என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

1 comment: