என்னவளுக்கு இறைத்தூது



இணையை உணர்த்திய இறையே வாழ்க
இனியவள் அவள் குலம் வாழ்க !!

இறையே எமக்கு தூது செல்க
இனியும் தாமதமில்லை என்று சொல்க !!

இதயம் அவளே என்று சொல்க
இணையும் நாள் பார்க்க சொல்க !!

இணையே இறைவன் துணைகொண்டு வருக
இல்லறம் சிறக்க நல்வாழ்வு தருக !!


குறிப்பு : இறையருள் எமக்கு உணர்த்தியதை என்னவளுக்கு உணர்த்த எம் இறைவனையே தூது அனுப்பினேன் .


என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment