அகரம் - வாழ்த்து
அம்மையே !
அப்பனே !
அன்பே !
அழகே !
அமுதே !
அருளே !
அறிவே !
அயிலே !
அரசே !
அறுபடையே !
அலைகடலே !
அருட்பெரும்சுடரே !
அடர்மழையே !
அணுவே !
அந்தமே !
அண்டமே !
அகிலமே !
ஆற்றலே !
ஆதியே !
ஆண்மையே !
ஆண்டவனே !
ஆருயிரே !
ஆறுமுகனே !
உகரம் - வேண்டுகோள்
உடல் மெலிய
உயிர் உருக
உச்சி மிளிர
உன்னடி சேர
உன்னதநிலை அடைய
உதவுவாய் முருகா !
உயிர் உருக
உச்சி மிளிர
உன்னடி சேர
உன்னதநிலை அடைய
உதவுவாய் முருகா !
மகரம் - ஏக்கம்
முகத்திரை (மாயை) யாவும் நீங்குமோ
முருகா உந்தன் அருளாலே !
முன்வினை யாவும் தீருமோ
முருகா உந்தன் அருளாலே !
முன்னின்று எமை காப்பாயோ
முருகா உந்தன் அருளாலே !
முன்னமே உன்னை சேர்வேனோ
முருகா உந்தன் அருளாலே !
முக்தியை நானும் அடைவேனோ
முருகா உந்தன் அருளாலே !
முடிவிலா நின்பெருவாழ்வு எமக்கருள்வாயோ
முருகா உந்தன் அருளாலே !
குறிப்பு :
(அ)காரம் + (உ)காரம் + (ம்)காரம் = ஓம் ( முருகா )
1. அகாரம் = 1 வரியில் , 1 வார்த்தையில் உள்ளத்தின் வாழ்த்தாய் அமையப்பெற்ற பாடல்
2. உகாரம் = 1 வரியில் , 2 வார்த்தையில் உள்ளத்தின் வேண்டுகோளாய் அமையப்பெற்ற பாடல்
3. மகாரம் = 1 வரியில் , 3 வார்த்தையில் உள்ளத்தின் ஏக்கமாய் அமையப்பெற்ற பாடல்
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment