புத்தாண்டு

வருவாய்  நற்புகழுடையதாய்  புத்தாண்டே !
வழியெல்லாம்    பூக்கள்  நிரப்பிடவே !
வானவில்லாய்  மலர்  தோரணமே !
வாழ்வில்  வசந்தம் வீசிடவே !
வலிமையிலும் வலிமையான உடல்நலமே !
வண்ணத்து   பூச்சியென மனமே !
வருங்காலம் இனி  வண்ணமயமாகிடவே !
வசந்தகாலமாய்  வாழ்வு  சிறந்திடவே !
வேளாண்மை வளம்  பெருகிடவே !
வேண்டுவன யாவும்  நல்கிடவே !
விஞ்ஞானத்தை வளர்க்கும்  நல்லறிவே !
வாழ்நாளெல்லாம்  வற்றாத  நல்வளமே !
வஞ்சகம் இல்லாத   நல்லுறவே !
வீழ்த்த முடியாத  வீரத்தையே !
வழங்கிடுவாய்  நிலையான  நிதானத்தையே !
வணங்கினேன்   தமிழால்  உமையே !
வரமளித்து வாழவைப்பாய்  எங்களையே !
வழங்கிடுவாய்   நற்பண்புகளை யாவர்க்குமே !
வழங்கிடுவாய்  மாண்புகளை மன்னுயிர்களுக்குமே !
வழங்கிடுவாய்  நன்மையை  அனுதினமே !

என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment