வீரன்







ஓங்கிய நின் வாளும்
உயர்ந்த நின் புகழும்

உதைத்துநின்ற நின் காலும்
வெகுண்ட நின் கழலும்

தினவெடுத்த நின் தோலும்
திரண்ட நின் மார்பும்

வீரம்செறிந்த நின் எழிலும்
சமர்கானும் நின் நிழலும்

விழிகள் இரண்டில் செந்தழலும்
வெற்றியை போற்றும் சிறுவிழலும்

வினைகளை அடியோடு வேரறுத்து
பரிபூரணமாய் எமைக்காப்பாய் வீரனே !


குறிப்பு : வீரன் எங்களது குலதெய்வம்


என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்


No comments:

Post a Comment